அருளாட்ச்சி முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மர்ஹூம். முகம்மது காஸிம் மரைக்காயர் ( ராயகிரி அப்பா ) அவர்களின் பேரனும், மர்ஹூம். காஸிம் மரைக்காயர் மற்றும் சரிபாள் அம்மாள் பீவி ஆகியோரின் மகனும் செய்யது மேத்தர் (சவுதி அரேபியா - தபுக்) அவர்களின் சகோதரருமாகிய மொகைதீன் மரைக்காயர் (26) அவர்கள் கோவையில் பணிபுரிந்து வந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனண அவசர பிரிவில் அணுமதிக்கப் பட்டார். சிகிச்சை பலன் இன்றி 6/03/2011 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் வபாஅத் ஆகி விட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரது நல்லடக்கம் அருளாட்ச்சியில வைத்து 7/03/2011 திங்கள் கிழமை மாலை 7.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment